மேட்டுப்பாளையம் அருகே ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஏகே செல்வராஜ்

மேட்டுப்பாளையம் அருகே இலுப்பநத்தம் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் திறந்து வைத்தார். குழந்தைகளுக்கான வசதிகளுடன் கூடிய இந்த மையம் பெற்றோர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.



Coimbatore: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியின் கீழ் 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் முழுவதுமாக முடிவுற்ற நிலையில், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் புதிய பாத்திரத்தில் பால் பொங்கல் வைத்து அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது பணிகளைத் துவக்கினர். மேலும், அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்களை வைத்து குத்து விளக்கும் ஏற்றப்பட்டது.



புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கண்களைக் கவரும் வகையிலும், கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் விலங்குகள் மற்றும் கார்ட்டூன் படங்கள் சுவர்களில் ஆங்காங்கே வரையப்பட்டுள்ளன. இது குழந்தைகளுக்கு ஒரு மகிழ்ச்சியான கற்றல் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் இலுப்பநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய அங்கன்வாடி மையம் அப்பகுதி குழந்தைகளின் ஆரம்பகால கல்வி மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...