கோவை அன்னபூர்ணா சீனிவாசன் ஜி.எஸ்.டி. மன்னிப்பு விவகாரம்: தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது - கனிமொழி எம்.பி கண்டனம்

ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில், நடைமுறை சிக்கல்கள் குறித்து பேசிய அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிதி அமைச்சரை சந்தித்து அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கோரிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், திருக்குறளை மேற்கோள் காட்டி, தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது என திமுக எம்.பி. கனிமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை கொடிசியாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், கோவை ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பான சிக்கல்களை எடுத்துரைத்தார்.

இனிப்புக்கு 5% ஜி.எஸ்.டி. மற்றும் காரத்துக்கு 12% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாகவும், Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்லாமலும் அதற்குள் வைக்கப்படும் க்ரீமுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாகவும் சீனிவாசன் சுட்டிக்காட்டினார். இந்த முரண்பாடுகள் காரணமாக உணவகம் நடத்துவதில் சிரமம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தொழில்துறையினர் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திருக்குறளை மேற்கோள் கட்டிதிமுக மகளிர் அணி தலைவர் மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி அவரது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவில், ‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து’

- குறள் 978, அதிகாரம் 98. 

ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்றுஎச்சரித்துள்ளார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...