கோவையில் வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் செப்டம்பர் 30க்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் செப்டம்பர் 30க்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார். 1,777 பேர் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செப்டம்பர் 12 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கணக்கை நேர் செய்யாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.


தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கோவை வீட்டுவசதி பிரிவுக்குள்பட்ட கணபதி, வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம், வீரகேரளம், காளப்பட்டி, முதலிபாளையம் பகுதிகளில் வீடு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்ற 1,777 பேர் வாரிய விதிமுறைகளின்படி பணம் செலுத்தும் காலம் முடிவடைந்தும் பணம் செலுத்தாமல் உள்ளனர்.


அரசு சார்பில் வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அளித்தும் இந்த ஒதுக்கீட்டாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்த முன்வரவில்லை என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, ஒதுக்கீட்டுதாரர்கள் உடனடியாக தங்களிடம் உள்ள அசல் விண்ணப்பம், ஒதுக்கீட்டு ஆணை, அசல் ரசீதுகள் போன்ற ஆவணங்களுடன் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கோவை வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, நிலுவைத் தொகையை செலுத்தி கிரைய பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


மேலும், நிலுவைத் தொகையை செலுத்தாதவர்களின் ஒதுக்கீடு உத்தரவு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...