மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம்: கால்நடைகளை வேட்டையாடுவதால் மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம் அருகே சென்னாமலை கரடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் கால்நடைகளை வேட்டையாடுவதால் மலையடிவார கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட சென்னாமலை கரடு பகுதியில் அண்மைக்காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் சென்னா மலை கரடு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.



சென்னா மலை கரடு வனத்தின் அடிவார கிராமமாக உள்ள அறிவொளி நகர், வெள்ளிப்பாளையம், கரட்டுமேடு, மோத்தேபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்கள் மற்றும் கிராமங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பு அதிகம் உள்ள நிலையில் அதனை குறிவைத்து கால்நடைகளை சிறுத்தைகள் வேட்டையாடி வருகிறது.



கடந்த இரண்டு மாதங்களில் ஆடுகளை வேட்டையாடி தூக்கி செல்வதுடன் பசு மாடுகளை தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளது. அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த துளசியம்மாள் என்பவர் வளர்த்து வந்த கன்று குட்டியை சிறுத்தை தாக்கியதில் அதன் கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காவலுக்கு வளர்க்கப்படும் நாய்களையும் இழுத்து சென்றுவிட்டதாக கூறும் அப்பகுதி மக்கள் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் வெள்ளிப்பாளையம் கிராமத்தில் சிறுத்தை ஒன்று அந்த பகுதியில் இருந்த விவசாய தோட்டத்தில் நுழைந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் அதன் வேட்டை தொடர்வதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தொடர்ந்து பொதுமக்களையும் கால்நடைகளையும் அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதனையடுத்து மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் அறிவொளி நகர் பகுதியில் நேற்று இரவு ஆய்வு செய்தார். அப்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்களை விரட்டி அச்சுறுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க அவர் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...