பொள்ளாச்சி மீனாட்சிபுரத்தில் மதுபான கூடத்தை இடமாற்ற இந்து முன்னணி வலியுறுத்தல்

பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மதுபான கூடத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் சப்-கலெக்டரிடம் மனு அளித்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதிப்புக்குள்ளாவதாக குற்றச்சாட்டு.


கோவை: பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மதுபான கூடத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனைமலை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் நேற்று (செப்டம்பர் 13) சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆனைமலை அருகே, திவான்சாபுதூர் ஊராட்சி மீனாட்சிபுரத்தில், தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் ஏற்கனவே ஒரு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக மற்றொரு மதுபானக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஏராளமான கூலித் தொழிலாளர்களும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களும் அதிகம் வசிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகுந்த பாதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகும் சூழல் உருவாகியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள மதுபான கூடத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் தங்களது மனுவில் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...