உடுமலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

உடுமலையில் ஓணம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாள் காரணமாக பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆக அதிகரித்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கேரளா மாநிலத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.



இந்த விலை உயர்வின் விவரங்களை பார்க்கும்போது, மல்லிகை ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆகவும், முல்லை ரூ.200-லிருந்து ரூ.1,000 ஆகவும், சாதிப்பூ ரூ.300-லிருந்து ரூ.600 ஆகவும், சம்பங்கி ரூ.100-லிருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், கோழிக்கொண்டை ரூ.60-லிருந்து ரூ.100 ஆகவும், செவ்வந்தி ரூ.150-லிருந்து ரூ.200 ஆகவும், பட்டன் ரோஸ் ரூ.150-லிருந்து ரூ.300 ஆகவும், கலர் செவ்வந்தி ரூ.200-லிருந்து ரூ.400 ஆகவும் அதிகரித்துள்ளது.



ரோஸ் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. 20 எண்ணிக்கை கொண்ட ரோஸ் கட்டு ரூ.160-லிருந்து ரூ.300 ஆகவும், பன்னீர் ரோஸ் ரூ.150-லிருந்து ரூ.300 ஆகவும், செண்டு மல்லி ரூ.40-லிருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தின் ஓணம் பண்டிகையுடன் சேர்த்து தமிழர்களின் விசேஷ நிகழ்வுகளான காதணி, சீமந்தம், பூப்பு நன்னீராட்டு விழா, திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்வுகளும் நாளை அதிகளவில் நடைபெறுகின்றன. இந்த பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாள் ஒன்றிணைந்து வந்ததால் பூக்களுக்கான தேவை அதிகரித்து, அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.



விலை அதிகரித்தாலும் கூட, மணக்கும் மல்லிகையை மனம் நோகாமல் வியாபாரிகள் சொன்ன விலைக்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...