உடுமலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

உடுமலையில் ஓணம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாள் காரணமாக பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆக அதிகரித்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கேரளா மாநிலத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.



இந்த விலை உயர்வின் விவரங்களை பார்க்கும்போது, மல்லிகை ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆகவும், முல்லை ரூ.200-லிருந்து ரூ.1,000 ஆகவும், சாதிப்பூ ரூ.300-லிருந்து ரூ.600 ஆகவும், சம்பங்கி ரூ.100-லிருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், கோழிக்கொண்டை ரூ.60-லிருந்து ரூ.100 ஆகவும், செவ்வந்தி ரூ.150-லிருந்து ரூ.200 ஆகவும், பட்டன் ரோஸ் ரூ.150-லிருந்து ரூ.300 ஆகவும், கலர் செவ்வந்தி ரூ.200-லிருந்து ரூ.400 ஆகவும் அதிகரித்துள்ளது.



ரோஸ் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. 20 எண்ணிக்கை கொண்ட ரோஸ் கட்டு ரூ.160-லிருந்து ரூ.300 ஆகவும், பன்னீர் ரோஸ் ரூ.150-லிருந்து ரூ.300 ஆகவும், செண்டு மல்லி ரூ.40-லிருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தின் ஓணம் பண்டிகையுடன் சேர்த்து தமிழர்களின் விசேஷ நிகழ்வுகளான காதணி, சீமந்தம், பூப்பு நன்னீராட்டு விழா, திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்வுகளும் நாளை அதிகளவில் நடைபெறுகின்றன. இந்த பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாள் ஒன்றிணைந்து வந்ததால் பூக்களுக்கான தேவை அதிகரித்து, அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.



விலை அதிகரித்தாலும் கூட, மணக்கும் மல்லிகையை மனம் நோகாமல் வியாபாரிகள் சொன்ன விலைக்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...