அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



கோவை: கோவை R.S புரம் காந்திபார்க் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்னபூர்ணா சீனிவாசனை மத்திய நிதியமைச்சரிடம் நேரில் மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



செல்வப்பெருந்தகை தனது உரையில், "கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்தை ஒடுக்கி அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், "சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி வெள்ளப் பாதிப்பை பார்வையிட்ட பிறகும் தமிழகத்திற்கு ஒரு பைசா நிதி கூட வழங்கவில்லை. உண்டியலில் பணம் போட்டால் அரசுக்குச் செல்லும் ஆனால் ஐயர் தட்டில் பணம் போட வேண்டும் என்று பக்தர்களை கோவிலில் வலியுறுத்தியுள்ளார்" என்று நிர்மலா சீதாராமனின் செயல்களை விமர்சித்தார்.

"மெட்ரோ இரயிலின் 2-ம் கட்டத்திற்கு 7000 கோடி ரூபாய் தருவதாக ஒப்புதல் அளித்தும், தற்போது தமிழ்நாட்டை புறக்கணித்து வருகிறார். ஆட்சியை தக்க வைப்பதற்காக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாருக்கு லட்சக்கணக்கான கோடிகளை அள்ளிக் கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் வருகின்ற தேர்தலில் எதிரொலிக்கும்" என்றும் செல்வப்பெருந்தகை எச்சரித்தார்.

"அன்னபூர்ணா பிரச்சனை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.



கூட்டம் முடிவில் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை க்ரீம் பன் வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...