ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்கள் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்தனர். அத்திப்பூ கோலம், பாரம்பரிய உடைகள் மற்றும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்வு ஆகியவை இடம்பெற்றன.



Coimbatore: கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான மலையாள மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மலையாள மக்கள் தங்களின் பாரம்பரிய உடைகளில் கோவிலுக்கு வந்தனர். கோவில் வளாகத்தில் கொடிக்கம்பத்தின் கீழே அத்திப்பூ கோலம் போடப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.



மலையாள மக்கள் தங்கள் வீடுகளிலும் அத்திப்பூ கோலமிட்டு சாமி தரிசனம் செய்து, பின்னர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர். ஓணம் பண்டிகையின் போது மகாபலி மன்னன் பூவுலகிற்கு வருவதாக ஐதீகம் உள்ளது. அவரை வரவேற்கும் விதமாக 10 நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நாளில் பிறந்து சில மாதங்களான குழந்தைகளுக்கு முதல் முறையாக சோறு ஊட்டுவது ஐதீகம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும், குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...