கோவை வாகராயம்பாளையத்தில் திமுக கொடியேற்றம் மற்றும் அண்ணா பிறந்தநாள் விழா

கோவை வாகராயம்பாளையத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாளையொட்டி திமுக கொடியேற்றம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கொடியேற்றினார். அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


Coimbatore: கோவை வாகராயம்பாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கொடியேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூர் கழகம் சார்பாக வாகராயம்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 75 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக இரு வண்ணக் கொடியினை கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் ஏற்றினார்.

தொடர்ந்து, கணியூர் ஊராட்சியில் அமைந்துள்ள கலைஞர் திடலில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.



அதேவேளையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என பெயர் சூட்டியவர் என்பதும், தென்னாட்டின் பெர்னாட்ஷா என அழைக்கப்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிறந்தநாள் விழா கோவை மாவட்டத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...