அண்ணா பிறந்தநாளில் எஸ்.பி. வேலுமணி சபதம்: எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்

கோவையில் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்ராக்குவோம் என சபதமேற்றார்.


Coimbatore: பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட அதிமுக நகர் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் தேமுதிகவைச் சேர்ந்த உதய பிரபாகரனும் கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி, "பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா சிறப்பான முறையில் கோவை மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. கழகத்தின் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கழகக் கொடியேற்றி, இனிப்பு வழங்கி, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது," என்றார்.



மேலும் அவர், "அண்ணா பிறந்த நாளில் கண்டிப்பாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடியார் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்று சபதம் ஏற்கிறோம். தற்போதைய திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. மக்கள் எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்," என்று கூறினார்.

கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்களையும் தெரிவித்த வேலுமணி, "கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்தில் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அண்ணா திமுக காலத்திலும், எம்ஜிஆர் காலத்திலும் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தந்து வருகின்றனர். அத்தனை மக்களுக்கும் அண்ணா திமுக சார்பாகவும், எடப்பாடியார் சார்பாகவும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...