வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா: 108 சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணியின் 33வது ஆண்டு கொண்டாட்டமாக இந்நிகழ்வு நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடும் வகையில், 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணியின் சார்பில் 33வது ஆண்டாக இந்த விழா கொண்டாடப்பட்டது.

வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் 108 விநாயகர் சிலைகள் வால்பாறை சுப்பிரமணி திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.



பின்னர், இந்த சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.



ஊர்வலம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு துவங்கி, காந்தி சிலை வழியாக வாழைத்தோட்டம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்றது.



பின்னர் மீண்டும் சுப்பிரமணியம் கோவில் வளாகத்தின் வழியாக நடுமலை ஆற்றை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.



இந்நிகழ்வில் இந்து முன்னணி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ராஜேஷ் (மாநில அமைப்பாளர்), C M அண்ணா துறை மாநில செயலாளர், T. பாலச்சந்திரன் (கோவை கோட்ட செயலாளர்) மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...