வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா: 108 சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணியின் 33வது ஆண்டு கொண்டாட்டமாக இந்நிகழ்வு நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடும் வகையில், 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணியின் சார்பில் 33வது ஆண்டாக இந்த விழா கொண்டாடப்பட்டது.

வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் 108 விநாயகர் சிலைகள் வால்பாறை சுப்பிரமணி திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.



பின்னர், இந்த சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.



ஊர்வலம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு துவங்கி, காந்தி சிலை வழியாக வாழைத்தோட்டம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்றது.



பின்னர் மீண்டும் சுப்பிரமணியம் கோவில் வளாகத்தின் வழியாக நடுமலை ஆற்றை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.



இந்நிகழ்வில் இந்து முன்னணி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ராஜேஷ் (மாநில அமைப்பாளர்), C M அண்ணா துறை மாநில செயலாளர், T. பாலச்சந்திரன் (கோவை கோட்ட செயலாளர்) மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...