கோவை நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை தாக்கி பசுமாடு பலி: பொதுமக்கள் அச்சம்

கோவை நாயக்கன்பாளையத்தில் இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று தோட்டத்தில் புகுந்து பசுமாட்டை கொன்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு நேரத்தில் தோட்டத்தில் புகுந்து பசுமாட்டை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 1 மணியளவில், நாயக்கன்பாளையம் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் ஒரு காட்டு யானை நுழைந்தது.



அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்திய யானை, தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாட்டை தனது தந்தத்தால் குத்தி கொன்றது.

இச்சத்தத்தைக் கேட்டு விழித்தெழுந்த செல்வராஜ், உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அடிவாரப் பகுதிகளான கோவணூர், நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி ஊடுருவி பயிர்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் இம்முறை ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காட்டு யானைகள் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...