கோவை - அபுதாபி விமான சேவை: குளிர்கால அட்டவணையில் இடம்பெறாததால் தொடர்வதில் சிக்கல்

கோவை - அபுதாபி இடையேயான இண்டிகோ விமான சேவை குளிர்கால அட்டவணையில் இடம்பெறவில்லை. ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என இண்டிகோ தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு தொடங்கப்பட்ட நேரடி விமான சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனம் இந்த சேவையை தொடங்கியது. பல ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு தொடங்கப்பட்ட இந்த சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. 186 பயணிகள் பயணிக்கக்கூடிய 'ஏர்பஸ் ஏ320' ரக விமானம் இந்த சேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் கோவையில் இருந்து அபுதாபி செல்லும்போது 93 சதவீத பயணிகளுடனும், அபுதாபியில் இருந்து கோவைக்கு வரும்போது 57 சதவீத பயணிகளுடனும் விமானம் இயக்கப்பட்டது.

இந்நிலையில், அக்டோபர் கடைசி வாரத்தில் தொடங்கி மார்ச் கடைசி வாரம் வரை அமல்படுத்தப்படும் குளிர்கால அட்டவணையில் இந்த சேவை இடம்பெறவில்லை. இது விமான பயண ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் குளிர்கால அட்டவணையில் அபுதாபி விமான சேவைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. இதற்கும் விமான நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை" என்று தெரிவித்தனர்.

இந்த விமான சேவை தொடர்ந்து இயக்கப்படுமா என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்த சேவையை தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...