பெரிய நெகமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி

கோவை மாவட்டம் பெரிய நெகமத்தில் ரூ.90 லட்சத்திற்கும் மேலான மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி தொடங்கி வைத்தார். சாலைப் பணிகள், சுகாதார நிலையம் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


Coimbatore: கோவை மாவட்டம் பெரிய நெகமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி செப்டம்பர் 16 அன்று தொடங்கி வைத்தார்.

ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பெரிய நெகமம், பல்லடம் சாலை - சந்திராபுரம் சாலை இணைப்பு சாலைக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்பி கே.ஈஸ்வரசாமி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



இதேபோல, பெரிய நெகமம், காளியப்பன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் இருந்து வாய்க்கால் மேடு வரை சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்டம், நெகமம் பேரூர் கழக பகுதியில் ரூ.72 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நெகமம் பல்லடம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் கே.வி.கே ரெசிடென்சியில் சிறுவர் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியையும் எம்பி கே.ஈஸ்வரசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...