மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: கோவையில் உடலுக்கு அரசு மரியாதை

உடுமலையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 27 வயது இளைஞரின் ஆறு உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கோவை அரசு மருத்துவமனையில் அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.



கோவை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கடத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (27) என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

கார்த்திக் ராஜா ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த செப்டம்பர் 15 அன்று, உடுமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானார். உடனடியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உடலில் இருந்து சிறுநீரகம், இதயம், கண் உள்ளிட்ட ஆறு உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இன்று (செப்டம்பர் 17) கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அவரது உடலுக்கு தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் அரசு மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...