பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் மரக்கன்றுகள் நடும் விழா

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பாஜக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


Coimbatore: பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சித்தாபுதூர், நியூ ஹவுசிங் யூனிட் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பூங்கா சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில மேற்பார்வை குழு தலைவர் H. ராஜா, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் Prof கனக சபாபதி மற்றும் கோவை மாவட்ட தலைவர் ஜே. ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



அதேபோல, ராமநாதபுரம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வும் நடைபெற்றது.





இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முன்னிலையில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பாஜகவில் இணைந்தனர்.



வள்ளியம்மாள் பூங்கா, 80 அடி சாலை, இராமநாதபுரம் பகுதியிலும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.



இங்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பூங்கா சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.



இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் H. ராஜா, பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...