பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் மரக்கன்றுகள் நடும் விழா

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பாஜக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


Coimbatore: பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சித்தாபுதூர், நியூ ஹவுசிங் யூனிட் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பூங்கா சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில மேற்பார்வை குழு தலைவர் H. ராஜா, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் Prof கனக சபாபதி மற்றும் கோவை மாவட்ட தலைவர் ஜே. ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



அதேபோல, ராமநாதபுரம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வும் நடைபெற்றது.





இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முன்னிலையில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பாஜகவில் இணைந்தனர்.



வள்ளியம்மாள் பூங்கா, 80 அடி சாலை, இராமநாதபுரம் பகுதியிலும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.



இங்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பூங்கா சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.



இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் H. ராஜா, பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...