பெரியாரின் 146வது பிறந்தநாள்: கோவையில் அதிமுக சார்பில் மரியாதை

கோவையில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் இதய தெய்வம் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் இதய தெய்வம் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் K. அர்ச்சுணன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் மாவட்டம் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான KR. ஜெயராம் முன்னிலையில் பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுச்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் R. பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் பல அதிமுக கழக நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பெரியாரின் சிந்தனைகளையும், சமூக சீர்திருத்த பணிகளையும் நினைவு கூரும் வகையில் இந்த மரியாதை நிகழ்வு நடைபெற்றது. அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரியாரின் கொள்கைகளுக்கு தங்கள் மரியாதையை தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...