உடுமலையில் பெரியார் பிறந்தநாள் பேனரில் நிர்மலா சீதாராமன் படம் இடம்பெற்றதால் சர்ச்சை

உடுமலையில் பெரியார் 146வது பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரில் நிர்மலா சீதாராமன் படம் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு இந்த பேனரை வைத்துள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட கச்சேரி வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பேனர்களில் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூரணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இது குறித்து முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சாதிக் பாஷா கூறுகையில், "மனித குலத்திற்கு எதிரான சாதி மத அதிகார ஆணவங்களின் வேர் அறுக்க உறுதிமொழி ஏற்போம் என்ற பெரியாரின் 146ஆவது பிறந்தநாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம். சமீபத்தில் ஜிஎஸ்டி கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்து தெரிவித்த அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன் அவர்களை அவமதிக்கும் விதமாக சாதிய வன்முறையுடன் செயல்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் புகைப்படத்தை தொடர்புபடுத்தி பிறந்தநாள் பரப்புரை செய்தி வெளியிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.

உடுமலை பகுதியில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் நிர்மலா சீதாராமன் இருக்கும் படம் தற்போது உடுமலை பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...