கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அரிய இருதய குறைபாடுடன் பிறந்த 7 நாள் குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

திருச்சியில் பிறந்த 7 நாள் குழந்தைக்கு அரிய இருதய குறைபாடு கண்டறியப்பட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.



Coimbatore: திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

பிறந்து வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆம்புலன்சில் நடமாடும் வென்டிலேட்டர் மற்றும் உரிய மருத்துவ உபகரணங்களுடன் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் செவிலியரின் தொடர் மருத்துவ கண்காணிப்பில் குழந்தை திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு இரண்டரை மணி நேரத்திற்குள் பிரத்தியேக பசுமை வழித்தடம் வழியாக கொண்டுவரப்பட்டது.



ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வந்த குழந்தைக்கு அவசர அறுவை சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டு மருத்துவர் விஜய் சதாசிவம் தலைமையில், மருத்துவர் மேன்ப்பிரேட் பெர்னாண்டோ, மருத்துவர் நரேந்திரன் மேனன், மருத்துவர் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழு குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பின்னான மருத்துவ பராமரிப்பு மருத்துவர் சித்தார்த்த புத்தவரபு, மருத்துவர் தேவபிரசாத், மருத்துவர் சுஜா மரியம் ஆகியோர் மேற்பார்வையில், NICUவில் குழந்தை முழு கவனிப்பு மற்றும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தையை சரியான நேரத்தில் கொண்டு வருவதை உறுதி செய்வதற்காக பசுமை வழித்தடத்தை திறம்பட ஒருங்கிணைத்த திருச்சி காவல்துறை மற்றும் கோயம்புத்தூர் நகர காவல் துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.



இந்நிலையில் இன்று, SNR சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் முன்னிலையில் மருத்துவ குழுவினர் இது தொடர்பாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். மருத்துவ குழுவினர் கூறுகையில், 100ல் ஒரு குழந்தைக்கு பிறவி இருதய குறைபாடு ஏற்படுவதாகவும் ஆண்டொன்றுக்கு 2,40,000 குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். இதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கு உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். உரிய நேரத்தில் உரிய அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இருதய குறைபாட்டில் இருந்து குழந்தை பரிபூரண குணமடைந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் தாய் கூறுகையில், அடிப்படையில் தான் ஒரு செவிலியர் என்றாலும் குழந்தையின் நிலையை அறிந்ததும் வேறெதுவும் யோசிக்க முடியாமல் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானதாக தெரிவித்தார். தனது குழந்தையை உரிய நேரத்தில் திருச்சியில் இருந்து கோவைக்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கும் தற்போது குழந்தையை கண்காணித்து வரும் மருத்துவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் விரைவில் குழந்தையுடன் வீடு திரும்ப இருப்பதாகவும் அவர் கூறினார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...