உடுமலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். ஏரிப்பாளையத்தில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் மங்களம் ரவியின் அறிவுறுத்தலின் பேரில், நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கோதீஸ்வரி கந்தசாமி, மாவட்டப் பொதுச் செயலாளர் வடுகநாதன், நகரப் பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, நகர மகளிர் அணி தலைவர் ரதி உள்ளிட்ட பல பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள தங்காத்த அம்மன் கோவிலில் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம், மாநில செயற்குழு உறுப்பினர் கோதீஸ்வரி கந்தசாமி மற்றும் ஏரிப்பாளையம் பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...