சிறுதுளி அமைப்புக்கு நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான தேசிய விருது

சிறுதுளி அமைப்பு CSR Universe-ன் தேசிய மாநாட்டில் நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான விருதினை பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்த ஒரு அமைப்பிற்கு மட்டுமே விருது வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore: சிறுதுளி அமைப்பு தேசிய அளவிலான சிறந்த சமூக மாற்றத்திற்கான விருதினை பெற்றுள்ளது. CSR Universe-ன் தேசிய மாநாடு மற்றும் சமூக மாற்றத்திற்கான 4ஆம் ஆண்டு விழாவில் நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலிருந்து 489 நிறுவனங்கள் விருதுகளுக்கு விண்ணப்பித்தன. அதில் 38 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து சிறுதுளி அமைப்பிற்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



அமுமு அறக்கட்டளை, EID Parry மற்றும் சிறுதுளி இணைந்து புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, கரூர், சென்னை மாவட்டங்களில் நன்னீர் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன. சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கண்மாய்களை பலப்படுத்தி, கொள்ளளவை அதிகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் குளங்களை தூர் வாரி, கொள்ளளவை அதிகப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, குளத்தின் நடுவில் பெர்கோலேஷன் ஷாஃப்ட் (மழைநீர் சேகரிப்பு) அமைக்கப்படுகிறது. இதனால் சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

நன்னீர் திட்டத்தின் கீழ், இதுவரை 18 நீர்நிலைகள் மீட்டெடுக்கப்பட்டு, 2000 மில்லியன் லிட்டருக்கு மேல் சேமிப்பு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 21,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். முன்பு ஒரு போகம் மட்டுமே பயிர் செய்த விவசாயிகள், தற்போது வருடத்திற்கு மூன்று போகம் விவசாயம் செய்யும் நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இத்தகைய சமூக மாற்றத்திற்கான பணிகளை ஆய்வு செய்த CSR Universe, சிறுதுளி அமைப்பிற்கு இந்த தேசிய அளவிலான விருதினை வழங்கியுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...