அன்னூர் அருகே வீட்டில் புகுந்து நகை கொள்ளை: ஒருவர் கைது

கோவை அன்னூர் அருகே கல்ராசிபாளையத்தில் பகல் நேரத்தில் வீட்டில் புகுந்து 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.



கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கல்ראசிபாளையம் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கல்ராசிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த 13ஆம் தேதி வெளியில் சென்றிருந்தார்.



அப்போது பகல் நேரத்தில் காரில் வந்த இரண்டு நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.



அவர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து, வீட்டில் இருந்த அனைத்து அறைகளையும் சோதனை செய்துள்ளனர்.

வீட்டிற்கு திரும்பிய தங்கவேல், திருட்டு சம்பவம் குறித்து அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.



விசாரணை நடத்திய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜீத் என்ற முனியாண்டியை கைது செய்தனர்.

கைதான நபரிடமிருந்து எட்டு சவரன் தங்க நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...