எச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ராகுல் காந்தியை கொச்சைப்படுத்தி பேசியதற்கு எதிராக, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, எச்.ராஜாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



மாவட்ட தலைவர் N.K.பகவதி பேசுகையில், "பாரம்பரியமிக்க நாட்டுக்காக தங்களுடைய சொத்துக்களை வழங்கி, இந்த நாட்டுக்காக பாட்டி, தந்தையை இழந்து நாட்டிற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் தலைவரை பார்த்து தேசவிரோதி என்று எச்.ராஜா விமர்சித்துள்ளார்" என்று கூறினார்.

மேலும் அவர், "இதற்கு மேல் ராகுல் காந்தியை எச்.ராஜா விமர்சித்தால், அவர் செல்லும் இடமெல்லாம் செருப்படி கொடுப்போம்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக நடைபெற்றது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...