வெள்ளக்கோயில் - சங்ககிரி இடையே ரூ.2000 கோடியில் நான்குவழிச் சாலை - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ நன்றி

மத்திய அரசு வெள்ளக்கோயில் முதல் சங்ககிரி வரை 70 கி.மீ நான்குவழிச் சாலையை ரூ.2000 கோடியில் அமைக்க உள்ளது. இச்சாலை திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை இணைக்கும்.


கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில், வெள்ளக்கோயில் முதல் சங்ககிரி வரையிலான 70 கிமீ நான்குவழிச் சாலை ரூ.2000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச்சாலை சங்ககிரி, வெப்படை, ஈரோடு, மொடக்குறிச்சி, விளக்கேத்தி, முத்தூர் வழியாக திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களில் அதற்கான டெண்டர் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் சாலைப் போக்குவரத்தையும் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும் நோக்கில், இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் Nitin Gadkari ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...