மேட்டுப்பாளையம் அருகே 35 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குட்டையில் இருந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்

மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் குட்டையில் இருந்த முதலையை 35 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் பிடித்தனர். முதலை பவானிசாகர் அணைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து முதலை இருப்பதை உறுதி செய்தனர்.

குட்டையில் 10 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால், முதலையைப் பிடிக்க தண்ணீரை முழுவதுமாக அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டது. நேற்று காலை 11 மணி முதல் பெட்ரோல் மூலம் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளைக் கொண்டு குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

இன்று மதியம் 3 மணி அளவில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, முதலையை பிடிக்கும் பணி தொடங்கியது.



தண்ணீர் குறைந்தவுடன் அங்குமிங்கும் ஓடிய முதலையை, கயிற்றில் சுருக்கு வைத்து வனத்துறையினர் வெளியே எடுத்து வந்தனர்.



பிடிபட்ட முதலையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.



பின்னர், அந்த முதலையை பவானிசாகர் அணைப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

கிட்டத்தட்ட 35 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, குடியிருப்பு அருகே உள்ள குட்டையில் இருந்த முதலை மீட்கப்பட்டு, பவானிசாகர் அணையில் விடுவிக்க எடுத்துச் செல்லப்பட்டது. வனத்துறையினரின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...