நவராத்திரி பண்டிகைக்கு கோவையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடிப்பு

கோவையில் நவராத்திரி பண்டிகைக்கு முன்னதாக கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. புதிய வகை பொம்மைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.



Coimbatore: நவராத்திரி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கோவையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அக்டோபர் 3 முதல் 10 நாட்கள் நடைபெறும் இப்பண்டிகையில் கொலு பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கோயில்களிலும் வீடுகளிலும் காட்சிப்படுத்தப்படும் இந்த கொலு பொம்மைகள் பொதுவாக ஏதேனும் ஒரு கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. அஷ்டலட்சுமி, தசாவதாரம் போன்றவை மிகவும் பிரபலமான கொலு பொம்மைகளாக உள்ளன.



இந்த ஆண்டு புதிய வரவாக அயோத்தி ராமர், பூரி ஜெகன்நாதர், பஞ்சுமிட்டாய், தாயக்கட்டை போன்ற கொலு பொம்மைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து ஆர்வத்துடன் கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.

முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு கொலு பொம்மைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பொம்மைகளை வாங்குவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...