கோவை மாநகராட்சி ஆணையாளர் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மதிய உணவை பரிசோதித்த ஆணையாளர், டி.வி.எஸ் நகரில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தை இன்று (18.09.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவினை உட்கொண்டு பரிசோதித்தார்.

மேற்கு மண்டலம் வார்டு எண்.17க்குட்பட்ட கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாநகராட்சி ஆணையாளர் குழந்தைகளுக்கான வசதிகள் மற்றும் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.



இதைத் தொடர்ந்து, அதே வார்டில் உள்ள டி.வி.எஸ் நகரில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும் ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.



இந்த ஆய்வில் மேற்கு மண்டல குழுத்தலைவர் தெய்வயானை தமிழ்மறை, துணை ஆட்சியர் (பயிற்சி) மது அபிநயா இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுபஸ்ரீ, சம்பத், உதவி செயற்பொறியாளர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் வீரன், உதவி நகர திட்டமிடுநர் காந்திமதி, உதவி பொறியாளர்கள் ராஜேஸ்வேணுகோபால், ஹரிபிரசாத், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...