பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இறுதிச்சுற்று போட்டி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இரண்டு நாள் இறுதிச்சுற்று போட்டி நடைபெறுகிறது.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII) சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இறுதிச்சுற்று நிகழ்வு இன்று (செப்டம்பர் 18) தொடங்கியது.



இந்த நிகழ்வில் EDII நிறுவனத்தின் இயக்குனர் ஆர். அம்பலவாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழுவின் உறுப்பினர் முனைவர் லவ்லி நா லிட்டில் பிளவர் துவக்க உரை நிகழ்த்தினார். EDII நிறுவனத்தின் மாநில திட்ட மேலாளர் சி.சண்முகராஜ் கருத்துரை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் மைய ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். EDII நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி சரண்யா நன்றியுரை வழங்கினார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் செப்டம்பர் 18 அன்று சென்னை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களைச் சேர்ந்த 29 அணிகளும், செப்டம்பர் 19 அன்று சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் திருச்சி மண்டலங்களைச் சேர்ந்த அணிகளும் பங்கேற்கின்றன. இந்த நிகழ்வை மேற்கூறிய மண்டலங்களின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த போட்டியானது மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிப்பதோடு, அவர்களின் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கவும், மேம்படுத்தவும் ஒரு தளத்தை வழங்குகிறது. இது மாணவர்களிடையே தொழில்முனைவோர் ஆர்வத்தை வளர்ப்பதோடு, அவர்களின் புதிய யோசனைகளை செயல்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...