பொள்ளாச்சி V. ஜெயராமன் வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் V. ஜெயராமன் செப்டம்பர் 18 அன்று வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். இந்த கடை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியின் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம், தேவனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டுள்ளது.



செப்டம்பர் 18 அன்று, முன்னாள் அமைச்சரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், கழகத் தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன் இந்த புதிய நியாய விலைக் கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அவர் கடையின் விற்பனையையும் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைக்கிணங்க, V. ஜெயராமன் கழகத்தின் புதிய உறுப்பினர் அட்டைகளை தேவனாம்பாளையம் மற்றும் வகுத்தம்பாளையம் கிளை கழக உறுப்பினர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் அவர் சிறப்புரையும் ஆற்றினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...