கோவை மருதமலை கோயிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் அமைப்பு பணி 70 சதவீதம் நிறைவு

கோவை மருதமலை கோயிலில் ரூ.5.20 கோடி மதிப்பில் லிப்ட் அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படும் இந்த லிப்ட் பணி அடுத்த 3 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படும் லிப்ட் பணி 70% நிறைவடைந்துள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முருகனின் ஏழாவது படைவீடாக கருதப்படும் இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளை ஏறுவதில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை எதிர்கொள்வதால், அவர்களின் வசதிக்காக லிப்ட் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்தது.

2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்த இப்பணி, ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் அருகே அமைக்கப்படும் இந்த லிப்ட் அமைப்பில், வாகன நிறுத்துமிடத்திலிருந்து கோயில் வெளிப்பிரகாரம் வரை இரண்டு நிலைகளில் லிப்ட்கள் அமைக்கப்படுகின்றன.

முதல் நிலையில் 10 மீட்டர் உயரம் வரை செல்லும் இரண்டு லிப்ட்களும், அடுத்த நிலையில் வெளிப்பிரகாரம் வரை செல்லும் இரண்டு லிப்ட்களும் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு லிப்டிலும் ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயணம் செய்ய முடியும்.

பாறைகள் நிறைந்த பகுதியில் லிப்ட் அமைப்பதற்கான அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் பணிகள் சற்று காலதாமதமானது. தற்போது வேகமாக நடைபெற்று வரும் இப்பணி அடுத்த மூன்று மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கோயில் வளாகத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கொடிமர மண்டபம் கட்டும் பணியும் வேகமாக நடைபெற்று வருவதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...