கோவையில் தடையை மீறி பீடி, சிகரெட் விற்ற 4 வியாபாரிகள் கைது

கோவையில் பள்ளி, கல்லூரிகள் அருகில் பீடி, சிகரெட் விற்பனை தடை உத்தரவை மீறி விற்பனை செய்த 4 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். போலீசார் சோதனையில் 204 பாக்கெட் பீடி, சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை உக்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா நேற்று (செப்டம்பர் 18) டவுன்ஹால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பி.எட் பெண்கள் பயிற்சி கல்லூரி எதிர்புறம் உள்ள ஒரு பெட்டிக்கடையில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடையில் இருந்து 148 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அக்கடையின் உரிமையாளரான ஒண்டிப்புதூர் எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (60 வயது) கைது செய்யப்பட்டார்.

இதேபோல, சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள மற்றொரு பெட்டிக்கடையில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை செய்ததாக மசக்காளிபாளையம் வெள்ளத்துரை (42 வயது) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 12 பாக்கெட் பீடி மற்றும் சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, உப்பிலிபாளையம் - காமராஜர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை செய்ததாக மணிவாசகம் (74 வயது) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 21 பாக்கெட் பீடி மற்றும் சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் 23 பாக்கெட் பீடி மற்றும் சிகரெட் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வரதராஜபுரம் பாலாஜி நகரைச் சேர்ந்த கனகராஜ் (70 வயது) கைது செய்யப்பட்டார்.

கல்வி நிறுவனங்கள் அருகில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நான்கு வியாபாரிகளும் சட்டத்தை மீறி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 204 பாக்கெட் பீடி மற்றும் சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...