கொடநாடு கொலை, கொள்ளைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசே காரணம்- சூலூர் எம்எல்ஏ கனகராஜ் குற்றச்சாட்டு

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே காரணமெனவும், முதலமைச்சர் வாழ்ந்த இடத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் செஞ்சேரி மலை அருகேயுள்ள பச்சாகவுண்டம்பாளையம் பகுதியில் ஆறுமுக கவுண்டர் என்ற தென்னை விவசாயி இரண்டு போர்வெல் போட்டும் தண்ணீர் வராததால், கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இவரது குடும்பத்திற்கு அதிமுக அம்மா அணியை சேர்ந்த சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் கனகராஜ் தனது ஒரு மாத எம்எல்ஏ ஊதியமான 55 ஆயிரம் ரூபாயை இன்று இழப்பீடாக வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ கனகராஜ் கூறுகையில், இரண்டு போர்வெல்கள் போட்டும் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட ஆறுமுக கவுண்டர் குடும்பத்திற்கு தன்னால் முடிந்த சிறுதொகையினை முதலுதவியாக வழங்கி உள்ளேன். மேலும், அவரது குடும்பத்திற்கு அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க உள்ளேன். 

தன்னை போல அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். 

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு எனது அரசான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே காரணம். முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த இடத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் கட்சிக்கும், தமிழக அரசிற்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. 

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மீதான வழக்கு உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே அணி மாறுவதாக அறிவித்தோம். தற்போது அணி மாறும் சூழல் இல்லை. இவ்வாறு எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...