சிங்காநல்லூர் மேம்பாலத்திற்கு அனுமதி: விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

கோவை சிங்காநல்லூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய மேம்பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. டெண்டர் விடப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிங்காநல்லூர் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சாலை வசதிகளை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது டெண்டர் விடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டெண்டர் விடப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. இந்த மேம்பாலம் திருச்சி சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே பல மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. காந்திபுரத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலம், ராமநாதபுரம் பகுதியில் மேம்பாலம், மற்றும் சமீபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்த உக்கடம் மேம்பாலம் ஆகியவை இதில் அடங்கும். மேலும், அவிநாசி சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேம்பாலம் கட்டப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...