கோவை நஞ்சப்பா சாலையில் இளம்பெண் ஓட்டிய மின்சார ஸ்கூட்டர் மோதி முதியவர் உயிரிழப்பு

கோவை நஞ்சப்பா சாலையில் நடந்து சென்ற 71 வயது முதியவர் மீது மின்சார ஸ்கூட்டர் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். 19 வயது இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை நஞ்சப்பா சாலையில் நேற்று (செப்டம்பர் 19) நடந்து சென்ற முதியவர் மீது மின்சார ஸ்கூட்டர் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (71) என்பவர் நஞ்சப்பா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென சுப்பிரமணி மீது மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி தலையில் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக சுப்பிரமணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மின்சார ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் கோவை ராம்நகர் சாஸ்திரி ரோட்டைச் சேர்ந்த அஷ்விதா (19) என்ற இளம்பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அஷ்விதா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கோவை நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...