கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு 2 செண்ட் நிலம் அன்பளிப்பு: எஸ்.பி.வேலுமணி உதவி

கோவை தொண்டாமுத்தூரில் ஒரு ரூபாய் இட்லி விற்கும் 90 வயது கமலாத்தாளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2 செண்ட் நிலம் வாங்கி கொடுத்தார். பாட்டியின் சேவையை பாராட்டும் விதமாக இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.



Coimbatore: கோவையில் ஒரு ரூபாய் இட்லி விற்கும் பாட்டி கமலாத்தாளுக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது சொந்த செலவில் 2 செண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 90 வயது பாட்டி கமலாத்தாள் பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறார். இவரது நேர்மையையும், சமூக சேவையையும் பாராட்டும் விதமாக, எஸ்.பி.வேலுமணி இந்த உதவியை செய்துள்ளார்.



பாட்டி கமலாத்தாளின் வீட்டின் அருகிலேயே இரண்டு செண்ட் நிலம் வாங்கப்பட்டு, அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் பத்திரத்தை நேரில் சென்று பாட்டி கமலாத்தாவிடம் ஒப்படைத்தார் எஸ்.பி.வேலுமணி.

இந்த அன்பளிப்பு மூலம், பாட்டி கமலாத்தாளின் சேவை மேலும் தொடர ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சமூக சேவையாளர்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...