கோவையில் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி சுட்டுப் பிடிப்பு

கோவையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி ஆல்வின், காவல்துறையினரை தாக்க முயன்றபோது, தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்டார். காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.


கோவையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி ஆல்வின், காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகர காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர், ரவுடி ஆல்வினை தேடி வந்தனர். கோவை கொடிசியா வளாகப் பகுதியில் ஆல்வின் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதிக்கு சென்றனர்.

காவல்துறையினரை கண்டதும் ஆல்வின் கத்தியால் தாக்க முயன்றார். இதில் தலைமை காவலர் ராஜ்குமாரின் இடது மணிக்கட்டில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. மேலும் மற்ற காவலர்களையும் தாக்கி தப்ப முயன்ற ஆல்வினை, தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.



துப்பாக்கிச் சூட்டில் ஆல்வினின் இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஆல்வினுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆல்வின் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க கோவை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிரபல ரவுடி ஆல்வின் காவல்துறையினரை தாக்க முயன்றதும், அவரை சுட்டு பிடித்ததும் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...