மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் கல்லூரி மாணவியை புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் கைது

மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் கல்லூரி மாணவியை செல்போனில் புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக் கைது செய்யப்பட்டார். பல பெண்கள் இதேபோன்ற புகார்களை அளித்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் பயணித்த கல்லூரி மாணவியை செல்போனில் புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக், தினமும் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு மெமோ ரயிலில் பயணம் செய்து வந்துள்ளார். இவர் ரயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வந்த ரயிலில் பயணம் செய்த அப்துல் ரஜாக், ஒரு கல்லூரி மாணவியை செல்போனில் படம் எடுத்ததாகவும், அவரை அருவருக்கத்தக்க வகையில் பார்த்ததாகவும், மேலும் அவர் மீது உரசி கொண்டே வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரயில் வந்தவுடன் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மேலும், அந்த ரயிலில் பயணித்த பல பெண்களும் இதே மாதிரி தங்களிடமும் அவர் நடந்து கொண்டதாக கூறி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் அப்துல் ரஜாக் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...