உடுமலை ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் செயற்கை நீரூற்றை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்

உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளை சிலை, செயற்கை நீரூற்று மற்றும் புதுப்பிக்கப்பட்ட அசோகர் ஸ்தூபி ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் செயற்கை நீரூற்றை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேற்று திறந்து வைத்தார்.



உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாக இந்த ரவுண்டானா போதிய பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சியளித்து வந்தது. இதனால் பொதுமக்கள் ரவுண்டானாவை பராமரித்து அழகுபடுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தன்னார்வலர்களின் உதவியுடன் ரவுண்டானா புதுப்பிக்கப்பட்டுள்ளது.



"பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும்" என்ற திருக்குறளுக்கு ஏற்ப, தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஏறு தழுவுதலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்துக்கள் மற்றும் வீரர்களுடன் கூடிய ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.





மேலும், வண்ண வண்ண விளக்குகள், செயற்கை நீரூற்றுப் பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் சமூக பங்களிப்பு நிதியில் அமைக்கப்பட்ட தலைவர்கள் பூங்கா மற்றும் புதுப்பிக்கப்பட்ட அசோகர் ஸ்தூபி சந்திப்பு ஆகியவற்றையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

உடுமலையின் அடையாளமாக அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் செயற்கை நீரூற்று முன்பு பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், நகர மன்ற தலைவர் மத்தின், நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...