கோவையில் இருதய ஆரோக்கியம் குறித்த மாபெரும் கண்காட்சி: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஏற்பாடு

கோவை புரூக்பீல்ட்ஸ் மாலில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பதி துவக்கி வைத்தார். செப்டம்பர் 22 வரை நடைபெறும்.


கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த மாபெரும் கண்காட்சி புரூக்பீல்ட்ஸ் மாலில் நடைபெற்றது. வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கண்காட்சியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, IAS அவர்கள் செப்டம்பர் 21 அன்று துவக்கி வைத்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி C.V ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் Dr. S. ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் Dr. S. அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் கண்காட்சி துவங்கியது.

கண்காட்சியில் இருதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விளக்கும் வகையில் மாதிரி இருதயத்தின் உடற்கூறியல் இடம்பெற்றிருந்தது. இதயத்தில் ஸ்டென்ட் எவ்வாறு பொருத்தப்படும், இதயத்தில் உள்ள அடைப்புகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகின்றன என்பது தெளிவாக விளக்கப்பட்டது. பேஸ்மேக்கர் குறித்த காட்சியும் இடம்பெற்றிருந்தது.

குழந்தைகளுக்கான இருதயவியல், சிறப்பு இருதய அறுவை சிகிச்சைகள், எலெக்ட்ரோபிசியாலஜி, லேசர் கரோனரி ஆன்ஜியோபிளாஸ்ட்டி குறித்த புதிய முன்னேற்றங்கள் பற்றிய விவரங்கள் காணொளிகளின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டன. நேரடியாக CPR செயல்விளக்கமும் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர்கள், இருதய நோய்களைத் தவிர்க்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினர். இக்கண்காட்சி செப்டம்பர் 22 வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...