'உதயநிதியை துணை முதல்வராக்குவதே திமுகவின் குறிக்கோள்' - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

திருப்பூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். போதைப்பொருள் பிரச்சினை, நாய்களின் தொல்லை, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தொட்டிபாளையத்தில் பாஜக காங்கேயம் தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.



கூட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் போதைப்பொருள் பிரச்சினை மிகவும் தீவிரமாக உள்ளதாகவும், இது குறித்து தான் மாநாடு நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். "பள்ளியில் வகுப்பு ஆசிரியர் மாணவியை போதைப் பொருட்கள் பயன்படுத்த அழைக்கின்றார். மாணவர்கள் அதிகப்படியானோர் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். மிகவும் அபாயகரமான ஒரு சூழ்நிலையை தமிழகம் சென்று கொண்டுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாய்களின் தொல்லை குறித்தும் தமிழிசை கவலை தெரிவித்தார். "நாய்களினால் ஆடுகள் கடிக்கப்படுவது அதிகமாக இந்த பகுதியில ஆடு வளர்க்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரசாங்கம் நாய்களை கட்டுப்படுத்த ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வர வேண்டும்," என்றார்.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசிய தமிழிசை, "பிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் நல்ல திட்டங்களை எல்லாம் மாநில அரசு சரியாக எடுத்துச் செல்வதில்லை. மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள் என்பதற்காகவே மாநில அரசு பாராபட்சமாக நடந்து கொள்கின்றது," என்று குற்றம்சாட்டினார்.

தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த தமிழிசை, "அவர்களுடைய ஒரே சிந்தனை உதயநிதி தான் தமிழகத்தில் துணைமுதல்வர் ஆக்குவது. போதைப்பொருட்கள் அதிகமாயிருச்சு சட்ட ஒழுங்கு கிடையாது, திருட்டு அதிகமாகிவிட்டது. முதலில் நிர்வாகத்தை ஒழுங்கு படுத்துங்கள் அதுக்கப்புறம் மற்றவை பாருங்கள்," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...