கலைஞர் புத்தக விநியோக வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜரானார். 2014ல் கலைஞரின் புத்தகத்தை விநியோகித்தபோது அதிமுக மன்றத்தை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது.


Coimbatore: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), சனிக்கிழமை (21.09.2024) காலை கோவை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜரானார். 2014ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற புத்தகத்தை பொதுமக்களுக்கு விநியோகித்த போது, அதிமுக மன்றத்தை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது.

இந்த சம்பவம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்தது. புத்தக விநியோகத்தின் போது, அருகிலிருந்த அதிமுக மன்றம், அதன் பெயர்ப்பலகை மற்றும் கொடிக்கம்பத்தை அடித்து உடைத்ததாகவும், அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாகவும் நா.கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை பொய் வழக்கு என திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.



நீதிமன்றத்திற்கு வந்த நா.கார்த்திக்குடன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், ப.கிருஷ்ணமூர்த்தி, மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



மேலும், மாநகர மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கே.ஆர்.ராஜா, பல்வேறு வட்டக்கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...