கோவை துடியலூரில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி அரங்கேற்றம்

கோவை துடியலூர் அருகே வி.கே.வி.நகர் வள்ளி முருகன் கலைக்குழுவின் 78வது வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. 250க்கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியான உடையில் கும்மி ஆடினர்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே ரங்கம்மாள் காலனி பகுதியில் வி.கே.வி.நகர் வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி 78வது அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.

முருகன் வழிபாட்டுடன் தொடங்கிய இந்நிகழ்வில், வள்ளி முருகன் கலைக்குழு ஆசிரியர் பழனிசாமி மற்றும் ரங்கநாதன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இணை ஆசிரியர்களான தயா நிதி, பிரித்தி தயா நிதி, சுபிக்ஷா, மெய்யரசன் ஆகியோரின் மேற்பார்வையில் நிகழ்ச்சி சிறப்பாக அரங்கேறியது.



5 வயது முதல் 50 வயது வரையிலான 250க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியான உடையணிந்து கும்மி ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை காண சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி ஆகிய இரண்டு வகையான கும்மி நடனங்களும் இந்த நிகழ்வில் அரங்கேற்றப்பட்டன. பாரம்பரிய கலை வடிவங்களை பாதுகாக்கும் முயற்சியாக இந்த ஆண்டு தொடர்ந்து 78வது முறையாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...