அதிமுக கட்சியை பாஜகவிடம் அடிமையாக்கியது எடப்பாடி பழனிச்சாமியின் பெரும் தவறு - தயாநிதி மாறன் விமர்சனம்

கோவையில் நடைபெற்ற திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசினார். அதிமுக, பாஜக அரசு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்போ அல்லது ஜாதி வாரி கணக்கெடுப்போ நடத்தவில்லை என்றும், ஆனால் பல நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள் என்றும் கூறினார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் பல குழப்பங்கள் உள்ளதாகவும், இதில் எழும் சந்தேகங்களுக்கு பதில் ஏதுமில்லை எனவும் அவர் விமர்சித்தார்.



தயாநிதி மாறன் தொடர்ந்து பேசுகையில், மக்கள் தங்களது பிரச்சனையை சொன்னால் பாஜக அரசு அதை திசை திருப்புவதாகவும், அன்னபூர்ணா விவகாரத்தில் கோவை மக்களை மிரட்டுகிறார்களோ என்று தோன்றுவதாகவும் கூறினார். மேலும், நிர்மலா சீதாராமன் வடமாநிலத்தில் ஹிந்தி மொழியில் கேள்வி கேட்பவர்களுக்கு மரியாதை கொடுப்பதாகவும், ஆனால் தமிழில் கேள்வி கேட்டால் மரியாதை கொடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வில் நடந்த முறைகேடு குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த தயாநிதி மாறன், மதத்தை வைத்தே தொடர்ந்து பாஜக அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

அதிமுக குறித்து கருத்து தெரிவித்த அவர், அதிமுக மிக கஷ்டமான காலத்தில் உள்ளதாகவும், முதுகு தண்டு வளைந்துள்ளதால் தான் அவர்களால் நிமிர முடியவில்லை எனவும், கட்சியை பாஜகவிடம் அடிமையாக்க வைத்திருந்ததே எடப்பாடி பழனிச்சாமி செய்த மிகப்பெரிய தவறு எனவும் விமர்சித்தார்.

அதிமுகவின் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு பதிலளித்த தயாநிதி மாறன், "ஒன்றாக ஆட்சி செய்யும் போது பணம் வாங்கிய போதும் தெரியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...