பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

கோவை சவுரிபாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.


Coimbatore: பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கை மண்டலில் சவுரிபாளையம் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று (செப்டம்பர் 22) மேளதாளங்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிங்கை மண்டல உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் ரமேஷ்குமார், SRS.ராஜா ஆகியோர் தலைமையில் வழிபாடு நடைபெற்றது. மாவட்ட உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் RT.முரளி, மண்டல உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர்கள் பைலட் முருகேசன், பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் ஜே.ரமேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், மாவட்ட துணைத் தலைவர் M.R.சரவணன், ராஜசேகர், அசோக்குமார், ராஜேந்திர பிரசாத், காட்டன்சுரேஷ், சக்தி, கணேசன், பூபேஷ், சொர்ண அரவிந்த், கண்ணன், வில்லியம்ஸ், மகேந்திரன் மற்றும் பல தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நடைபெற்றதோடு, பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. கோவில் வளாகத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...