உடுமலையில் மாநில அளவிலான ரேக்ளா போட்டி: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் துவக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாமராயப் பட்டியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான ரேக்ளா போட்டி நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இரட்டை மாட்டு வண்டியில் ஏறி போட்டிகளை துவக்கி வைத்தார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாமராயப் பட்டியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான ரேக்ளா எனப்படும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன.

இப்பந்தயத்தில் 200 மீட்டர், 400 மீட்டர் என்ற இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. குறிப்பிட்ட இலக்கை குறுகிய நேரத்தில் அடையும் இரட்டை மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.



முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இரட்டை மாட்டு வண்டியில் ஏறி போட்டிகளை துவக்கி வைத்தார். ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்ற இரட்டை மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர் கயல்விழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஈஸ்வரசுவாமி, ஈரோடு பிரகாஷ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ருத்ரப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உடுமலை அருகே நடைபெற்ற இந்த மாநில அளவிலான ரேக்ளா போட்டியை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் இருபுறமும் நின்று கண்டு களித்தனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...