உடுமலையில் மாநில அளவிலான ரேக்ளா போட்டி: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் துவக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாமராயப் பட்டியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான ரேக்ளா போட்டி நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இரட்டை மாட்டு வண்டியில் ஏறி போட்டிகளை துவக்கி வைத்தார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாமராயப் பட்டியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான ரேக்ளா எனப்படும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன.

இப்பந்தயத்தில் 200 மீட்டர், 400 மீட்டர் என்ற இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. குறிப்பிட்ட இலக்கை குறுகிய நேரத்தில் அடையும் இரட்டை மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.



முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இரட்டை மாட்டு வண்டியில் ஏறி போட்டிகளை துவக்கி வைத்தார். ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்ற இரட்டை மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர் கயல்விழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஈஸ்வரசுவாமி, ஈரோடு பிரகாஷ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ருத்ரப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உடுமலை அருகே நடைபெற்ற இந்த மாநில அளவிலான ரேக்ளா போட்டியை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் இருபுறமும் நின்று கண்டு களித்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...