கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா வேட்டை: எஸ்.பி. கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த கஞ்சா வேட்டையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல், 10 குற்றவாளிகள் கைது, 1,000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல். 86 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ், ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கடந்த 15 வருடங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 2,000 குற்றவாளிகளை கண்காணிக்க 86 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தீவிர சோதனையின் போது, அனைத்து சந்தேக நபர்களின் இருப்பிடங்களும் சோதனை செய்யப்பட்டன. இதன் விளைவாக, 10 கஞ்சா குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



மேலும், மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.



குறிப்பிடத்தக்க மற்றொரு நடவடிக்கையாக, தொண்டாமுத்தூர் பகுதியில் செப்டம்பர் 22 அன்று சட்டத்திற்கு விரோதமாக மதுபானம் விற்ற ஒரு பார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த பார் பேரூர் வட்டாட்சியர் மூலம் சீல் வைக்கப்பட்டது. இந்த தொடர் நடவடிக்கைகள் கோவை மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...