பீளமேடு அவினாசி சாலை உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றியமைக்க கோரி மக்கள் மனு

பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வியாபாரிகளும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பெரும்பாலானோர் விளாங்குறிச்சி சாலையை தினமும் பயன்படுத்தி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த மேம்பாலம் அமைக்கப்படுவது மேற்படிச்சாலையில் பயணம் செய்யும் அனைவருக்கும் பெரும் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பீளமேடு விளாங்குறிச்சி அவினாசி சாலை சந்திப்பில் உள்ள உயர்மட்ட ஏறுதள பாதையை மாற்றி அமைத்து தர வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...