இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்

கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் நினைவு தினத்தில் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை, போதைப்பொருள் பிரச்சனை, கோயில் தரிசன கட்டணம் குறித்து விமர்சனம் செய்தார்.



கோவை: கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் நினைவு தினத்தையொட்டி மாபெரும் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

கோவை மாநகர் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சசிகுமாரின் திருவுருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



இராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருகின்றன. கோவையில் ரகசிய அமைப்பு துவங்கப்பட்டிருப்பதை உளவுத்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால் கோவையில் மீண்டும் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது," என்றார்.

மேலும், "பங்களாதேஷ் பயங்கரவாதிகள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஊடுருவி வருகின்றனர். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டால் தமிழகத்தில் அதிகளவில் கொலைகள் நடக்கின்றன," என்று குற்றம்சாட்டினார்.

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உபயோகித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் தேங்காய் உடைத்து முறையிட போவதாகவும் தெரிவித்தார்.

"கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டி பல போராட்டங்கள் நடத்தியும், இந்த அரசாங்கம் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் செயல்படுகிறது," என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறி முடித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...