இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்

கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் நினைவு தினத்தில் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை, போதைப்பொருள் பிரச்சனை, கோயில் தரிசன கட்டணம் குறித்து விமர்சனம் செய்தார்.



கோவை: கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் நினைவு தினத்தையொட்டி மாபெரும் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

கோவை மாநகர் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சசிகுமாரின் திருவுருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



இராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருகின்றன. கோவையில் ரகசிய அமைப்பு துவங்கப்பட்டிருப்பதை உளவுத்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால் கோவையில் மீண்டும் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது," என்றார்.

மேலும், "பங்களாதேஷ் பயங்கரவாதிகள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஊடுருவி வருகின்றனர். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டால் தமிழகத்தில் அதிகளவில் கொலைகள் நடக்கின்றன," என்று குற்றம்சாட்டினார்.

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உபயோகித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் தேங்காய் உடைத்து முறையிட போவதாகவும் தெரிவித்தார்.

"கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டி பல போராட்டங்கள் நடத்தியும், இந்த அரசாங்கம் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் செயல்படுகிறது," என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறி முடித்தார்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...